சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Author: Kodanki

மாதவன் – சாய் பல்லவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம்

செய்திகள்
மாதவன் - சாய் பல்லவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதன் மூலம், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கின்றது 'பிரமோத் பிலிம்ஸ்'      'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகர் மாதவன். இவர் தற்போது இந்திய திரையுலகின், குறிப்பாக இந்தி திரையுலகின் பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் 'பிரமோத்' பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'பிரமோத் பிலிம்ஸ்' சார்பில் பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். உலகளவில் பிரசித்தி பெற்ற 'லவ் இன் டோக்கியோ', 'ஜுக்னு' போன்ற இந்தி திரைப்படங்களை 'பிரமோத் பிலிம்ஸ்'  தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக இரு...

கவிஞர் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் கேரளாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிடுகிறார்

செய்திகள்
        கவிஞர் வைரமுத்து எழுதிய ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூல் மூன்று மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்த நூலை ஞானபீடம் பரிசுபெற்ற புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இம்மாதம் 28ஆம் தேதி கேரளாவில் வெளியிடுகிறார். நூலின் முதற்படியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொள்கிறார். கே.எஸ்.வெங்கிடாசலம் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். மலையாள இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா கோழிக்கோட்டை அடுத்த திரூரில் கொண்டாடப்படுகிறது. துஞ்சன் திருவிழா என்று ஒவ்வோராண்டும் நான்கு நாட்கள் நடைபெறும் அந்தக் கலை இலக்கியத் திருவிழாவில் அகில இந்திய அறிஞர்களும் எழுத்தாள...
ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – நடிகர் சூர்யா

ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – நடிகர் சூர்யா

செய்திகள்
ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சூர்யா இதுபற்றி திருவனந்த புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சூர்யா கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வில் ஒரு மாணவர் காப்பி அடித்தார் என்பதற்காக தேர்வு முறையையே ரத்து செய்வது போல இது உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் எழுச்சி மிக்கதாக உள்ளது. அவர்கள் தாமாகவே வந்து போராட்டம் நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த போராட்டத்தில் உண்மை உள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியே பேசப்படும் அளவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இவ்வாறு சூர்யா கூறினார்....
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?:  தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை

செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு அறவழியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறார். அவரும், தனது வீட்டின் முன்பு அறவழியில் அமைதியான போராட்டத்தை நடத்தினார். அவரைப்போலவே லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக சென்னை மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, சிம்பு ஒரு விஷயத்தை போராட்டக்காரர்களிடையே பகிர்ந்தார். அப்போது அவர் பேசும்போது, போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக சொல்கிறார்கள். உடனே, என்னுடைய நண்பர்கள் எனக்கு ஒரு யோசனையை சொன்னார்கள். அதாவது, தேசியக் கொடியை உ...
பீட்டா சதி… பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை….!!!

பீட்டா சதி… பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை….!!!

செய்திகள்
பீட்டா சதி... பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை....!!! பல மாணவர்கள், மாணவிகள், பிரபலங்கள் என பசியும் பட்டினியுமாக மெரினா கடற்கரையில் உச்சி வெய்யிலில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து வரும், மூத்த நடிகர் சிவகுமார் தனது கருத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளது . கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது. ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடு...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம்

செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மவுன-உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தின் உணர்வுக்காக நாளை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்....
தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..!  பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்

தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..! பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்

செய்திகள்
தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..! பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம் இது குறித்து ஆவண பட இயக்குனர் ஆபிரகாம் லிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் பாரம்பரியத்தின் மீதும் காலம் காலமாக தொடுக்கப்பட்டு வரும் மறைமுக அடக்குமுறைகளில் ஒன்றாக இதுவரை இருந்த வந்த அந்நிய சக்திகள் இப்போது அதி தீவிரமாக களத்தில் இறங்கியிருப்பதால் தமிழ் பாரம்பரியத்தை மீட்கவும், காப்பாற்றவும் தமிழர்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள். மாணவர்கள் போராட்டம் எப்போதும் தோற்றதில்லை. தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கையாலாகாத அரசாக மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுகிறது. தமிழர்கள் மீதான அடக்குமுறையை சத்தமில்லாமல் மத்திய அரசு செய்து வருவது இந்த விவகா...
ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் நடிகர்கள்… 20ம் தேதி உண்ணாவிரதம், ஷூட்டிங் ரத்து!

ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் நடிகர்கள்… 20ம் தேதி உண்ணாவிரதம், ஷூட்டிங் ரத்து!

செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் உணர்வோடு அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த உண்ணாவிரதம் நடக்கும். இந்தப் போராட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சியும் கலந்து கொள்ளவிருக்கிறது. அன்று படப்பிடிப்புகளை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். நடிகை திரிஷா பீட்டா தொடர்பான ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார். என்றாலும் நாம் அவரை கொச்சைப்படுத்த தேவ...
மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம் விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம்

மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம் விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம்

செய்திகள்
மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம் விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம் இது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ்காமாட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: விஷால் அவர்களுக்கு, இந்தச் சமூகம் பல இழிவு நிலைகளை கடந்து வந்திருக்கிறது. எங்கள் இனத்தை கொத்துக் கொத்தாய் காவுகொடுத்திருக்கிறோம். எங்கள் மீனவர்கள் இரத்தத்தை கடல் அரக்கர்களின் துப்பாக்கிக் குண்டுகள் தினமும் ருசி பார்த்துக்கொண்டே இருக்கிறது. எங்களின் உரிமைகள் பலதும் பறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மொழி சிதைக்கப்படுகிறது. உணர்வுகள் மழுங்கடிப்பட்டுவிட்டது. எத்தனையோ போராளிகள் தட்டி எழுப்பி தட்டி எழுப்பி இன்று உணர்வுபெற்றிருக்கும் எம் மக்கள் கொழுந்துவிட்டு தீப்பந்தமாய் தற்போது மாறி நிற்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல.. மாணவ இளஞ்சிங்கங்கள் இன்று தங்கள் முழுபலத்தையும் காட்டியிருக்கிறார்கள். அய்யா இது எங்கள் போ...
மலையக தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் தலைவர்  நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆருக்கு இலங்கை கல்வி அமைச்சர் புகழாரம்..!

மலையக தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் தலைவர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆருக்கு இலங்கை கல்வி அமைச்சர் புகழாரம்..!

செய்திகள்
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொண்டாடி வருகிறார்கள். எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களின் மனசில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றாலும் அவர் பிறந்த இடம் இலங்கை என்பதால் இலங்கையிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்ஜிஆரின் திருவுருவ படத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்று வீடியோ திரையிடப்பட்டது. எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து பலர் பேசினார்கள். தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அந்நிய தேசத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் நடப்பது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடித்தக்கது. மேலும், தமிழ் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரனுக்கு பல்வேறு வகையில் கோடிக்கணக...