Author: Kodanki
தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசுடன் போராடி கோரிக்கையில் வெற்றி பெற முடியாத திரையரங்க உரிமையாளர்கள், இப்போது திரையரங்க நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
கேளிக்கை வரி குறித்து முடிவெடுப்பதற்காக இரு தரப்பு பிரதி நிதிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுக்கள் அடுத்த சில நாட்களில் முடிவடைய வாய்ப்பிருக்கிறது. ...
நினைவு நாளில் திறக்கப்படும் சிவாஜி மணிமண்டபம்..! கடற்கரையிலேயே சிலை வைக்கவும் கோரிக்கை
தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.
பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. இதனை யடுத்து 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார்.
பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலையை அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு ம...
மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தப்பாட்டம்’..!
தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கதாநாயகனாக துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
இப்படத்திற்கு இசை - பழநி பாலு, ஒளிப்பதிவு - ராஜன், பாடலாசிரியர் - விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி - ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு - ஆதம் பாவா
விரைவில் இப்படம் திரைக்கு வெளிவரவிருக்கிறது.
முன்னதாக இப்படம் வெளியாகி கிடைக்கும் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில...
அமைச்சர் வாங்கிய லஞ்சம்..! சினிமா விநியோகஸ்தர் சிங்காரவேலன் பகீர் குற்றச்சாட்டு..!
அமைச்சர் வாங்கிய லஞ்சம்..!
சினிமா விநியோகஸ்தர் சிங்காரவேலன் பகீர் குற்றச்சாட்டு
கேளிக்கை வரி ரத்து செய்ய வேண்டி தமிழகத்தில் தியேட்டர் ஸ்டிரைக் நடந்து வருகிறது.
சுமார் ஆயிரம் தியேட்டர்கள் தமிழகத்தில் மூடப்பட்டு உள்ளன.
இது குறித்து தமிழக அரசுக்கு சினிமா துறை தொடர்பாக பல வேண்டுகோள் விடுத்தும் பலன் ஏதும் இல்லாத நிலை.
தொடர்ந்து 3ம் நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசும்போது தான் தயாரித்த அட்ரா மச்சான் விசுலு படத்துக்கு துறை அமைச்சர் 5 லட்சம் லஞ்சம் கேட்டார். கொடுத்த பிறகு தான் வரிவிலக்கு சான்று அளிக்கப்பட்டது.
ஒரு ஆண்டில் அந்த துறை அமைச்சர் 30 கோடிக்கு மேல் சினிமா தயாரிப்பவர்களிடம் லஞ்சம் பெறுகிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இது அரசு வட்டாரத்தில...
லட்சம் பார்வையாளர்களை கடந்த அண்டாவ காணோம் டீசர்…
https://www.youtube.com/watch?v=DIh2h41UPlM
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்..!
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கணவர் அஸ்வின் ராம்குமார் இருவரும் பரஷ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இவருக்கு சென்னை சேர்ந்த் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமார் இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு பின்னர் சினிமா படம் தயாரிப்பில் சௌந்தர்யா ஈடுபட்டார். அவர் தயாரிப்பில் கோவா என்ற திரைப்படம் வெளிவந்தது.
இதற்கிடையே, அஸ்வின் - சௌந்தர்யா தம்பதியிடையே முதலில் திருமண உறவில் கருத்து வேறுபாடுகள் எற்பட்டது. இதனை அடுத்து சின்ன, சின்ன சண்டைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந...
காமெடியன் பேரன் வில்லன் ஆகும் “நான் யாரென்று நீ சொல்”
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாகP.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு " நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.
கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.
அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.எழுதி இயக்கி இருப்பவர் A.M.பாஸ்கர்.
பிரபல நடிகையான லஷ்மிராயை சினிமாவில் குறுக்கெழுத்து என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.
அவரிடம் நான் யாரென்று நீ சொல் படம் பற்றி கேட்டோம்...
சோனாவின் மகள் சுதா ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் மற்றும் பேக்கரி தொழில...


