ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26
Shadow

politics

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயண செலவு விவரங்கள் வெளியிட வேண்டும் -தகவல் ஆணையர்

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயண செலவு விவரங்கள் வெளியிட வேண்டும் -தகவல் ஆணையர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான லோக்கேஷ் பத்ரா தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பிரதமர் மோடி கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரை ஏர் இந்தியா விமானம் மூலம் வெளிநாடு பயணம் செய்ததில் ஏற்பட்ட செலவுகள், அதற்காக அந்நிறுவனத்துக்கு அரசு வழங்கிய தொகை, செலுத்த வேண்டிய நிலுவை தொகை, செலவு ரசீதுகள், ஒட்டுமொத்த செலவு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு இருந்தார். ஆனால், மத்திய வெளியுறவு அமைச்சகம் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை. இந்த தகவலை வெளியிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூரிடம் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் அலுவலகம் செலுத்த வேண்டிய தொகை எதுவும் உள்ளதா?...
சவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம் -மன்னர் நடவடிக்கை

சவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம் -மன்னர் நடவடிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எண்ணை வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக்கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக உள்ளார். இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கனவே இருந்த தடைகளை நீக்கினார். லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், மந்திரிகள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார். இந்தநிலையில் சவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ராணுவம், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதற்கான காரணம் என்ன என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ராணுவதுறை பட்டத்து இளவரச...
ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை மற்றும் புத்தக வெளியீட்டு விழா !

ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை மற்றும் புத்தக வெளியீட்டு விழா !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விஜயா குழும மருத்துவமனைகள் மற்றும் (விஜயா மருத்துவ பிரிவு & கல்வி அறக்கட்டளை) சார்பில் நேற்று ஒரு மிக பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு.பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை வெளியிடப்பட்டது. இந்த மாபெரும் விழாவில் சுகாதார துறை மற்றும் சினிமா துறையின் பல மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களை பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது. தபால் முத்திரை இந்தியாவின் துணை ஜனாதிபதி  மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு. பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள்  'தி  லெஜண்ட் - ஸ்ரீ B .நாகி ரெட்டி' என்ற புத்தகத்தை வெள...
ஜெயலலிதா உருவச்சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறப்பு

ஜெயலலிதா உருவச்சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி ஜெயலலிதாவின் சிலை ஆந்திராவில் தயாரிக்கப்பட்டது. அந்த சிலை முழு உருவ வெண்கல சிலையாகும். ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போன்று 7 அடி உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்த சிலை சென்னை கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதா சிலையை நிறுவ முடிவு செய்யப்பட...
தமிழ் பாரம்பரியத்திற்கும் தமிழுக்கும்  தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி

தமிழ் பாரம்பரியத்திற்கும் தமிழுக்கும் தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம். மகாகவி பாரதியாரின் மண்ணில் நிற்பதற்கு பெருமைபடுகிறேன். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட இப்போது கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செ...
பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்மா ஸ்கூட்டர் திட்டம்..!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்மா ஸ்கூட்டர் திட்டம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி, மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வரவேற்றார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கதுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கலைவாணர் அரங்க வளாகத்தி...
எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி

எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அனைத்துக்கட்சி கூட்டம்  குறித்து கேட்டபோது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார் ரஜினி. கமலின் அரசியல் பயணம் குறித்து கேட்டபோது, ‘நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே. கமலின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. முழுவதும் பார்த்தேன்’ என்றார். கமல் கட்சி பொதுக்கூட்டத்தை நடத்தியது போன்று எப்போது பொதுக்கூட்டம் நடத்தி கட்சியை அறிவிப்பீர்கள்? என்று நிருபர்கள்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரின் அளவு 14.75 டி.எம்.சி. குறைந்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரகாலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார்...
திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம்  கமல்ஹாசன் அறிவிப்பு

திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் கமல்ஹாசன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமேஸ்வரத்தில் நேற்று அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும், ஆறு கைகள் இணைந்த சின்னத்தை கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார். இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இடது பக்கமா? வலது பக்கமா? என கேட்காதீர்கள். நடுவில் பயணிக்க விரும்புகிறேன் என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடக்கும் என தெரிவித்தார். இதற்கிடையே, தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, நிர்வாகிகளை தேர்வு செய்வது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் காவிரி நீரை பெறுவதற்காக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும் என்றார். ‘மேலும், உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்ட...