வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை  சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம். ‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. தெலுங்கு திரையுலகில...
உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
உறுமீன் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அடுத்ததாக நாயை கதாபாத்திரமாகக் கொண்டு அட்வெஞ்சர் பாணியில் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உறுமீன். சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல வரவேற்பையும் இயக்குநருக்கு பாராட்டையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி. இந்தியாவில் நாய்களை மையமாக வைத்து எவ்வளவோ படங்கள் வந்தாலும், அவை முழுக்க நாய்களின் வாழ்வியலைப் பேசக்கூடிய அட்வெஞ்சர் படங்களாக இல்லை. இந்த நிலையில் நாயை மையமாக வைத்து முழுமையான அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அறிவித்து அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்காக 8 மாதங்கள் ஆராய்ச்சி ...
தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். நாளை(வெள்ளி) முதல் தியேட்டர்கள் இயங்கும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.ஸ்டிரைக்கேளிக்கை வரி முற்றிலும் நீக்கம், லைசென்ஸ் புதுப்பித்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள், கடந்த மார்ச் 16-ம் தேதி படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மட்டும் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.முதல்வருடன் சந்திப்புஇப்பிரச்னை தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமியை தியேட்டர் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது இரண்டுநாளில் தனது கருத்தை சொல்வதாக முதல்வர் தெரிவித்ததாக ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை ...
குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள்! – ஞானவேல்ராஜா சீற்றம்

குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள்! – ஞானவேல்ராஜா சீற்றம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா தெரிவித்துள்ளார். பருத்தி வீரன், சில்லுனு ஒரு காதல், சிங்கம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களை தன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரித்தவர் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவரின் மனைவி நேஹா நேற்றிரவு (மார்ச் 21) ட்விட்டரில், “திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விடக் கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்” என்று தெரிவித்திருந்தார். சில மணிநேரங்களில் இந்தப் பதிவை நீக்கிய அவர், பின்னர் ஏன் அந்த பதிவை நீக்கினேன் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளார். அதில், “நான் வெளியிட்ட ...
நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்!

நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, 2001-ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார். மழை என்ற படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார் ஸ்ரேயா. பிறகு கதாநாயகியில் இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்திரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்தார், அந்த படத்தை தயாரித்ததும் இவர் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமண செய்திகள் அவ்வப்போது வதந்திகளாக வெளியாகி தான் வந்தது. ஆனாலும் ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.மிகப்...
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின்  உதவி இயக்குனர்!

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.    புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின் மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே “மேகம் செல்லும் தூரம்” வீடியோ பாடலின் சாராம்சம்.    இந்த பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு மட்டுமே இமாச்ச...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ்,கவுரவ தலைவர் பதவிக்கு இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ்மற்றும் கவுரவ தலைவராக இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் செயலாளராக மனோஜ்குமாரும், பொருளாளராக ரமேஷ் கண்ணாவும் போட்டியின்றி தேர்வாகினர். துணைத் தலைவர்களாக ஆர்.கே.செல்வமணி மற்றும் யார் கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக பேரரசு, மனோபாலா, வெங்கடேஷ், அரிராஜன், லியாகத் அலிகான், சின்னி ஜெயந்த், பாலசேகரன், ...
அதி நவீன திரை அனுபவங்களைக் கொடுக்கும் ’சிவசக்தி தியேட்டர்’கள்!

அதி நவீன திரை அனுபவங்களைக் கொடுக்கும் ’சிவசக்தி தியேட்டர்’கள்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரையரங்க நிர்வாக இயக்குனர் முருகானந்தம். “அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலத்திற்கேற்ப நிறைய படங்க...
ரஜினி, கமல் தலையிட்டால்தான் இந்த திரையுலக பிரச்சனைகளுக்கு தீர்வு!

ரஜினி, கமல் தலையிட்டால்தான் இந்த திரையுலக பிரச்சனைகளுக்கு தீர்வு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பய ணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது. சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.. இதனை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமல் இருவரையும் “இந்த திரைப்பட துறையின் இன்னல்களை களைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தை துவக்குங்கள்.. இதில் உங்களுக்கு ஆதரவாக நாங்...
ஹன்சிகா மீது அவரது மேனேஜர் மோசடி புகார்!

ஹன்சிகா மீது அவரது மேனேஜர் மோசடி புகார்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார். மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில், அவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவ...