உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். துவக்கி வைத்தார், “கீர்த்தி சுரேஷ்”.
உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். குத்துவிளக்கு "தீட்டி" துவக்கி வைத்தார், "கீர்த்தி சுரேஷ்".
கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்".
உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று.
யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது.
இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்...
