MOVIES
டிச.28ம் தேதி ஆண்டின் கடைசியில் ரசிகர்களை வளைக்க வரும் அதர்வாவின் பூமரங்..!
இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் 'பூமராங்' படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்துதல் தான் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இயக்குனர் கண்ணன் கூறுகையில், "டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே குழுவில் அனைவருக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு. இந்த படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இரு...
லடாக்கில் ஆபத்தான மலையேறிய ஹரீஷ்கல்யாண்..!
ஹரிஷ் கல்யாண் இளம் தலைமுறையினரின் கனவு கண்ண்னாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.
"சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன" என்று லடாக் படப்பிடிப்பு...
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா..!
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவா!
ஜீவா அவ்வளவு எளிதில் அடைய முடியாத ஒரு தனித்துவமான குணத்தை கொண்ட ஒரு நடிகர். வணிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் படங்களை கொடுக்கும் அவரது திறமை அவரை அனைத்து தரப்பு பார்வையாளர்களும் மிகவும் ரசிக்கும் ஒரு நடிகனாக வைத்திருக்கிறது. அவர் எப்போதுமே வழக்கமான விஷயங்களை உடைத்து புதுமையான விஷயங்களை செய்யும் லட்சியத்துடன் இருப்பவர். கீ (டெக்னோ), ஜிப்சி (ட்ராவல்) மற்றும் கொரில்லா (அட்வென்சர்) ஆகிய மூன்று வித்தியாசமான படங்களை தொடர்ந்து ரத்தின சிவாவின் பெயரிடப்படாத படத்தின் மூலம் கமெர்சியல் பாணிக்கு திரும்புகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படம் ஒரு ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாகும்.
"ஜீவா சார் எப்போதும் மிகச்சிறந்த ஒரு நடிகர், ஆக்ஷன், எமோஷன், நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றை த...
முழு நேர அரசியலுக்காக சினிமாவுக்கு கமல் முழுக்கு..!
1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்து வரும் டிச.14ம் தேதி முதல் ஷூட்டிங்கை துவக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம் தான், தனது கடைசி திரைப்படம் என்றும், அதற்கு பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டு நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், 1992ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கருக்கு சென்று வந்த ‘தேவ...
தனுஷின் மாரி 2 டிசம்பர் 21ல் ரிலீஸ்!
தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.மேலும் இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக இருக்கிறது என தனுஷ் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் சாய்பல்லவி,டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார்,கிருஷ்ணா ,ரோபோசங்கர் ,வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர்.
தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ்நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்...
LGR இயக்கத்தில் அலிபாபாவும் 40 குழந்தைகளும்
இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படத்திற்கு “அலிபாபாவும் 40 குழந்தைகளும் “என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தில் புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. மற்றும் அப்புகுட்டி, மொட்ட ராஜேந்திரன், தேவதர்ஷினி,சிங்கம்புலி, மனோபாலா,மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய L.G.ரவிச்சந்தர் கதை,திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய “ நான் அவளை சந்தித்த “ போது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அவர் இயக்கும் நான்காவது படம் இது.
படம் பற்றி இயக்குனர் பேசியதாவது...
நான் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதையம்சம் கொண்டவை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொ...
“பாக்சர்” ஆகும் நடிகர் அருண்விஜய்..!
நடிகர் அருண் விஜய் தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. தனது எனர்ஜியால் எப்போதும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை செய்ய தயாராக இருப்பவர். அவர் தனது படமான 'பாக்ஸர்' படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார். அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, "இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை ம...
சீதக்காதி அய்யா மெழுகு சிலையை திறந்தார் இயக்குனர் மகேந்திரன்..!
பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இந்த அய்யா மெழுகுச்சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யா ஆதிமூலம் 75 வயதுடைய நாடக நடிகர். சமகாலத்திய மொத்த நாடக நடிகர்களின் ஒரு உருவம் தான் ஆதிமூலம். தனி மனிதர்களுக்கு மெழுகுச்சிலை வைப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முறை. 2...
தமிழ் படத்தில் ஆபாச பட நாயகி மியா ராய்!
விமல் - ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ..
இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.
ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது பெயர் தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.
கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன்.
படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது.
போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
ஆபாச பட நாயகி என்றெ விளம்பர படுத்தி தமிழ் சினிமாவை படுத்தி எடுக்கிறார்களோ......

