இசைஞானியுடன் பணியாற்றுவது மிகவும் சவுகரியமான ஒன்று” ; ‘நினைவெல்லாம் நீயடா’ இயக்குநர் ஆதிராஜன்
*“இசைஞானியுடன் பணியாற்றுவது மிகவும் சவுகரியமான ஒன்று” ; ‘நினைவெல்லாம் நீயடா’ இயக்குநர் ஆதிராஜன்*
*“பிரசவத்துக்கு 3 நாட்கள் முன்பு கூட ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தில் நடித்தது மறக்க முடியாத நினைவு” ; நடிகை மதுமிதா மகிழ்ச்சி*
*“கமர்ஷியல் பாடல்கள் எனது முகவரி அல்ல” ; ‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில் சினேகன் சீற்றம்*
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் "நினைவெல்லாம் நீயடா". ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்..
பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். "அப்பா" படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ...









