தீபாவளி அன்று விக்ரம் - தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் டீசர் வெளியீடு
இந்த படத்தின் டீசர் அக்டோபர் 18ம் ம் தேதி தீபாவளித்திரு நாள் அன்று வெளியிடப் பட உள்ளது..
விரைவில் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்... இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி...
ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்...
சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு.... அதை பார்ப்பதற்கு முன்...
பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இந்த கூட்டணியை வைத்து பிரமாண்ட தயாரிப்பில் உருவான படம் ஸ்பைடர்.
சுமார் 145 கோடி செலவாம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ்.
எல்லாம் சரி இந்த பிரமாண்டம் தமிழில் எடுபடுமா....
மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார்... தமிழில் அறிமு...
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் க.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, இந்த காலத்து இளைஞர் களுக்கு பிடித்த வகையில் ஹர ஹர மஹாதேவகி படம் உருவாக்கப்பட்டுள்ளது. கவுதம் கார்த்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை.
கொஞ்சம் விரிவா சொல்லணுமுன்னா 18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்றப்படம். அதுனாலே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். இப்படத்துலே புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம்.
அதாவது முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை ...
சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் டீஸர்..
https://youtu.be/B1yUgwx4OwI
முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்..
இப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டரை கவுதம் மேனன், முருகதாஸ் , வெங்கட் பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டனர்... இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்
...
B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அபியும் அணுவும்' படத்தில் கேரளா சினிமா உலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த காதல் படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
''ஒரு அழகான, ஆழமான காதல் கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இதனை அறிந்த நானும் எனது அணியினரும் இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப ஒரு அழகான மற்றும் துணிச்சலான காதல் கதையை உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் ஒரு முக்கியமான கட்சிக்காக, கதையின் தேவைக்கேற்ப டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாயை வைத்து ஒரு முத்தக்காட்சியை படமாக்கியுள்ளோம். இந்த காட்சியை அவர்களிடம் கூறியபொழுது முழு ஒத்துழைப்பு தந்து , எந்த வித தயக்கமும் இன்றி நடித்து கொடுத்தார்கள். அக்டோபர் மாதம் 'அபியும் அணுவும்' ரிலீசாகும். இந்த வித்யாசமான, துணிச்சலான காதல் கதையை இளைஞர்கள் நிச்சயம்...
நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால் பலிவாங்கப்பட்ட ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பாடம்'.
இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் .ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர் . நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாடம்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் பேசுகையில் , ''சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்னையை பற்றி தன் 'பாடம்' பேசும். தமிழ் மீடியத்தில் படிக...
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன்.
அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார்.
எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்...
தொழில் பக்தியுடன் செய்யும் தொழிலை ரசித்து, அனுபவித்து செய்வதனாலேயே வெற்றியாளர்கள் மற்றவர்களிலிருந்து வேறுபடுகின்றனர். பிஜி தீவில் முழு வேகத்துடன் நடந்துவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ;பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'பார்ட்டி'யில் நடிகர் சத்யராஜ் அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது. என்றுமே இளமையான துள்ளலோடு இருக்கும் சத்யராஜ் தனது நடிப்பாற்றலால் ஒட்டுமொத்த படக்குழுவையே அசத்தியுள்ளார். இவர் இப்படத்திற்கான தனது 40 நாள் இடைவிடாத படப்பிடிப்பினை முடித்து சென்னை திரும்பியுள்ளார். இவரது நடிப்பையும் அர்ப்பணிப்பையும், மற்றவர்களை ஊக்குவிப்பது பற்றியும் 'பார்ட்டி' படக்குழுவே புகழாரம் சூட்டிவருகிறது. இவரது நடிப்பு வாழ்க்கையின் சிறந்த நடிப்பாற்றல்களில் இப்படம் இடம் பெரும் என கூறப்படுகிறது.
இயக்குனர...
விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை.
சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்...