HOME SLIDER
ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட பூஜை
ஹர ஹர மஹாதேவகி" கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து
ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைப...
தயாரிப்பாளர் ஆகும் சின்னத்திரை நடிகை..!
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா.
அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா.
அத்துடன் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருப்பவர் நீலிமா.
தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இந்த நிறுவனம் zee தமிழ் தொலைகாட்சிக்காக தயாரிக்கும் நெடுந்தொடர் "நிறம் மாறாத பூக்கள்"
முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளதமி ரவி டேவிட் ராஜ்,தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வரும் திங்கள் முதல் வெள்ளி வரை ...
சென்சார் A குடுத்த காமெடி படம் ஜீவனின் ஜெயிக்குற குதிர
ஜெயிக்கிறகுதிர படத்திற்கு “ A “ சர்டிபிகேட்
சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிர “
இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஆஞ்சி. ...
மகள் வரலட்சுமி நடிக்கும் சக்தி பட போஸ்டரை வெளியிட்டார் சரத்குமார் ..!
மகள் வரலட்சுமி நடிக்கும் சக்தி பட போஸ்டரை வெளியிட்டார் சரத்குமார்.
துல்கர் சல்மானின் சோலோ பட டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினி..!
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும், பெஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம் 'சோலோ'.
இப்படத்தின் தயாரிப்பாளர் அனில் ஜெயின் மற்றும் இயக்குனர் பெஜாய் நம்பியார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து 'சோலோ' படத்தின் ட்ரைலரை காண்பித்துள்ளார்.
அதனை பார்த்த சூப்பர் ஸ்டார் , ட்ரைலர் மிக அருமையாக இருப்பதாக கூறி மிகவும் பாராட்டியுள்ளார். இப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியுள்ளார்.
இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் 'சோலோ' படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் . சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டுக்கள் 'சோலோ' அணியினரை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது....
காந்தி ஜெயந்தி நாளில் மீண்டும் ஜூங்கா மூலம் கூட்டணி போட்ட இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டீம் பாரீசில் தொடங்கிய ஷூட்டிங்..!
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி
சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்கைகோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்த...
தமிழில் அறிமுகம் ஆகும் மோகன்பாபுவின் மகன் விஷ்ணுமஞ்சுவுக்கு பத்திரிகையாளர் வசனம் எழுதும் படம் குறள் 388
தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு..
இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் " குறள் 388"
தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது..
தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் "வோட்டர்" என்றும் பெயரிடப்பட்டுள்ளது
விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார்.
மற்றும் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி,நாசர் பிரகதி,முனீஸ்காந்த் தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கடைசி பெஞ்ச் கார்த்தி, காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.
இசை - s.s.தமன்
வசனத்தை பத்திரிக்கையாளர் ரவிசங்கர் எழுதுகிறார்.
ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ்
கலை ...
நடிகர் திலகத்தின் 91 ஆம் பிறந்த தினம்???? ….ஒரு வித்தியசமான நினைவு கூறல் .????
????இன்று நடிகர் திலகத்தின் 91 ஆம் பிறந்த தினம்???? ....ஒரு வித்தியசமான நினைவு கூறல் .????
????மறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் ✍????
✍????ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?
????சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.
✍????ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க ...
டி.ஆர்.முதலில் மேடை நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் – விஷால் கண்டனம்
மீராகதிரவன் இயக்கிய விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை பேசும் போது சொல்ல மறந்து விட்டார் என நடிகை தன்ஷிகாவை அதே மேடையில் டி.ராஜேந்தர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.
நடிகை தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை விமர்சித்ததால் அவர் அழுது கொண்டே மேடையில் இருந்து இறங்கி போனார்.
இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை டி.ராஜேந்தருக்கு ஏற்படுத்தி உள்ளது. மேடை நாகரீகம் பற்றி பேசும் டி.ஆர். நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் டி.ஆர்.வருத்தம தெரிவிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளர் விஷால் வெளியிட்ட அறிக்கை:
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்ம...

