வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

ஜெ.,அக்டோபர் மாதமே மரணம்: திமுகவைச் சார்ந்த டாக்டர் சரவணன் நீதிபதியிடம் புகார்

ஜெ.,அக்டோபர் மாதமே மரணம்: திமுகவைச் சார்ந்த டாக்டர் சரவணன் நீதிபதியிடம் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா டிச.5-க்கு முன்பே அக்டோபர் மாதமே மரணமடைந்துவிட்டார், அவரது கைரேகை அவர் மரணமடைந்த பின்னரே எடுக்கப்பட்டது. ஆகவே அதில் நீரோட்டம் இல்லை என திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமியிடம் புகார் அளித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.5 அன்று மரணம்டைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெ.தீபா, ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணையை தொடங்கி உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்களை நேரிலோ, பதிவு தபாலிலோ தன்னிடம் அளிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் சில ஆவணங்...
37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவு: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவு: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது. சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அத...
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் ராக வேந்திரராவின் தீவிர பக்தர். இந்த நிலையில், ரஜினிகாந்த் நேற்று கர்நாடகா - ஆந்திர எல்லையில் உள்ள மந்திராலயம் ஸ்ரீராக வேந்திரர் சாமி கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று ராகவேந்திரர் சாமியை பயபக்தியுடன் வழிபட்டார். அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து தியானம் செய்தார். பின்னர் ராகவேந்திரர் கோவில் மடாதிபதி சுபதேந்திர தீர்த்தசாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அங்கும் ரஜினிக்கு மடம் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. மடாதிபதியுடன் ரஜினி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராகவேந்திரர் கோவில் மிகவும் பழமையாகிவிட்டது பற்றியும், பக்தர்கள் தங்க விடுதிகள் தேவை என்பது பற்றியும் கேட்டு அறிந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் மந்திராலயம் ராகவேந்திரர் கோவிலு...
சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சமந்தா ஜோடி சேர்ந்த படம் ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சமந்தா ஜோடி சேர்ந்த படம் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் தொடங்கியிருக்கிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது விசாரணை ஆணையம்

HOME SLIDER, NEWS, politics
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாகவோ அல்லது புகார் மனுவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரத்தை ஆணையத்துக்கு அளித்துள்ளனர். இதற்கிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் இன்று காலை விசாரணை தொடங்கியது. தி.மு.க. மருத்துவர் அணி துணை தலைவர் டா...
இயக்குனர் கீராவின் புதுப்படம் “பற” ..!

இயக்குனர் கீராவின் புதுப்படம் “பற” ..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் "பற" இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்கின்றனர். முன்னனி நடிகர்களும் நடிக்கயுள்ளனர். முதல் நாள் படப்பிடிப்பில் டைரக்டர் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டு ஆக்ஷன், கட் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்....
கந்துவட்டி கொடுமைக்கு ஒன்றாக இருந்து முடிவு கட்டுவோம் – விஷால்

கந்துவட்டி கொடுமைக்கு ஒன்றாக இருந்து முடிவு கட்டுவோம் – விஷால்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்! கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இன்று தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபடுக்கொண்டிருக்கிறோம்...
கொடூர கந்துவட்டிக்கார அன்புவிடம் சொல்லுங்கள்  தனிமையில் என்றாவது உன் மனசாட்சியிடம் பேசு… சசி என்னை மன்னித்து விடு  – தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் அசோக்குமார் மரண எழுத்துமூலம்

கொடூர கந்துவட்டிக்கார அன்புவிடம் சொல்லுங்கள் தனிமையில் என்றாவது உன் மனசாட்சியிடம் பேசு… சசி என்னை மன்னித்து விடு – தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் அசோக்குமார் மரண எழுத்துமூலம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  அசோக்குமார் மரண வாக்குமூலம் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக இன்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர்  ம்துரைஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள விஷயங்களை அப்படியே இங்கு தந்துள்ளோம். ‘என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை. எனக...
தற்கொலை செய்ய தூண்டுவதில் தாதா என பேரெடுத்த சினிமா பைனான்சியர் அன்பு கைதுக்கு பயந்து தப்பி ஓட்டம்..!

தற்கொலை செய்ய தூண்டுவதில் தாதா என பேரெடுத்த சினிமா பைனான்சியர் அன்பு கைதுக்கு பயந்து தப்பி ஓட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
????இன்னிக்கு சூசைட் பண்ணிக்கிட்ட அசோக் (சசிகுமார் பார்ட்டனரின்) மரணத்துக்கு காரணமானவன் அன்பு என்று அழைக்கப்படும் அன்புச்செழியன். இவரு @ இவன் கிட்டத்தட்ட 2001 காலகட்டத்திலே(யே) தன்னை சசிகலாவின் பினாமி -ன்னு சொல்லிக் கொள்வான். இத்தனைக்கும் 2001-2006 ஏ டி எம் கே ஆட்சி காலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பல்வேறு நபர்கள் அரெஸ்ட் செய்யப் பட்டாலும், ஜி.வி.தற்கொலைக்கு காரணமான இந்த அன்புச் செழியன் கடைசி வரை அரெஸ்ட் செய்யப் படவேயில்லை. அதற்கு காரணம் சசிகலாவின் ஆசி என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட அன்பு உண்மையைச் சொல்கிறாரா பொய் சொல்கிறானா என்பது கடைசி வரையில் தெரியவில்லை. தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவன் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். ஆனா இந்த அன்பு-ங்கறவன் தற்கொலைச் சம்பவத்தில் (மட்டுமே) புகழ...