வீட்டு வசதி வாரிய டெண்டரில் முறைகேடு..??? மவுனம் காக்கும் அரசு
‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம்” என்று பாடிய புரட்சித்தலைவரின் வரிகளுக்கு உயிர் கொடுத்து, சொந்த வீடு வேண்டும் என்று கனவு காணும் தமிழக மக்களின் ஆசைக் கனவுகளை ஈடேற்றி, அனைவருக்கும் வீடு” என்னும் குறிக்கோளை நிறைவேற்றிட, ஜெயலலிதா, தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிப்பதையும், தமிழ்நாட்டை குடிசைப் பகுதிகள் அற்ற மாநிலமாக மாற்றுவதையும், தனது இலட்சிய நோக்காக பிரகடனப்படுத்தினார். ஜெயலலிதாவின் இந்த உயரிய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு சீர்திருத்தங்களையும், கட்டுமானத் தொழில் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது.
மேலும் அகில இந்திய அளவில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மிக அதிக அளவிலான வீட்டுவசதி அலகுகள் ஒப்புதல் பெறப்பட்டு, மேலு...









