ஆதீன இசைப்புலவர் விருது வழங்கி ஆதீனம் கௌரவித்தது தனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது – கார்த்திக் ராஜா
ஆதீன இசைப்புலவர் விருது வழங்கி ஆதீனம் கௌரவித்தது தனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பிரமாண்ட அரங்கத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60 ஆவது மணிவிழா மாநாடு இன்று துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா மகனும் திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
ஜகம் நீ ஜனனி என்ற பாடலுடன் துவங்கி பக்தி பாடல்கள், பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் போன்ற உருக்கமான திரைப்படப் பாடல்களை பாடி அனைவரையும் தனது இசையால் கட்டுவித்தார்.
இன்னிசை கச்சேரியை நிறைவு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் கார...









