சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட ராகுல்

 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

ஆனால் மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என கூறி மறுத்தார்.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. உயர் அதிகாரி தெரிவித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டுள்ளார்.

அவர் சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே. சின்காவின் ஊழல் புகாரை, ‘கிரைம் திரில்லர்’ (குற்றப்புலனாய்வு) சினிமா படத்துக்கு ஒப்பிட்டுள்ளார்.

அதில் அவர், “சவுதிகார் இஸ் தீப் (காவலாளியே திருடர்) என்னும் கிரைம் திரில்லர் படம் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் புதிய அத்தியாயத்தில், சி.பி.ஐ. உயர் அதிகாரி மிக கடுமையான குற்றச்சாட்டுகளை ஒரு மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சட்டத்துறை செயலாளர், மத்திய மந்திரிசபை செயலாளர் ஆகியோர் மீது சுமத்தி உள்ளார்” என கூறி இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி என கூறுவது வழக்கம். அதை ராகுல் காந்தி தொடர்ந்து கிண்டல் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் ராகுல் காந்தி வரும் 28-ந்தேதி சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மிசோரம் மாநிலத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சாம்பாய் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக சாடினார்.

அப்போது அவர், “மிசோரம் மாநிலத்தில் நுழைவதற்கு இது ஒன்றுதான் வாய்ப்பு என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் உணர்ந்து கொண்டுள்ளன. அவர்கள் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்பதை அறிந்துள்ளனர்” என கூறினார்.

அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி, பாரதீய ஜனதா கட்சியின் கூட்டாளி என விமர்சித்தார்.

மிசோரமின் கலாசாரத்தை அழிக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மிசோ தேசிய முன்னணி உதவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.

 

488 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன