வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அரசியல் அறிவிப்புகளுக்கு பிறகு ரஜினியுடன் கமல் ஒரே மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சியாக இளையராஜா 75 நிகழ்ச்சி அமைய உள்ளது.


இவர்களோடு மேலும் பல முன்னணி ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரம் தொடங்கி அறிமுக நாயகன்வரை ஒரே மேடையில் தோன்ற இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக இளையராஜா 75 விழா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியும், 3-ந் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். ரஜினி மற்றும் கமல் இருவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இருவருமே கண்டிப்பாக வருவதாக உறுதியளித்துள்ளனர்.

399 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன