சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

ஷூட்டிங் முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு..!

 

“இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு” படப்பிடிப்பின் நிறைவு நாள்.

“பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”.

நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.

சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் உற்சாகமான கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தனர்.

” திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்” என்று உற்சாகமாக பேசினார் இயக்குநர் அதியன் ஆதிரை.

616 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன