*காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி.*
*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.*
*விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.*
*மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.*
*’நியாய்’ எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.*
*100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் – காங். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு.*
*2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் – காங். தேர்தல் அறிக்கை.*
*தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – காங். தேர்தல் அறிக்கை.*
*இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை – காங். தேர்தல் அறிக்கை.*