சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது. குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜாக்பாட்” இப்படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இசையில், . ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் முழு ஷூட்டிங்கும் 35 நாட்களில் முடிந்துவிட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜோதிகாவின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
குலேபகாவலி படமும் முழு நகைச்சுவை கதையாக இருந்தது. அதிலும் ரேவதி வில்லியாக நடித்து கலகலப்பூட்டினார்.
இப்போது அவரோடு ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.
காமெடி நட்சத்திர பட்டாளங்களும் இருப்பதால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளது ஜாக்பாட்.