வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

மரியாதை இல்லையாம் இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!

 

மரியாதை இல்லையாம் இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!

 

 

நம்மூர் ராகவா லாரன்ஸ் தமிழில் காஞ்சனா படத்தை பல பாகங்கள் எடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் காஞ்சனா3 படத்தை தமிழில் ரிலீஸ் செய்த கையோடு இந்திப்படத்தை இயக்க மும்பை சென்றார்.


காஞ்சனா படத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் “லஷ்மி பாம்” என்ற பெயரில் இயக்கி வந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் லாரனஸ் கவனத்திற்கு தெரியாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திடீரென ரிலீஸ் செய்தார்கள்.


இதற்கு முன்பே இயக்குனர் லாரன்சுக்கும் பட நிறுவனத்திற்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது.
இந்த நிலையில் தான் இயக்கி வந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து புலம்பி ஒரு டிவிட் போட்டு மும்பையில் இருந்து சென்னை திரும்பி விட்டார்.
அவரு போட்ட டிவிட்டுல
“எனக்கு மரியாதை இல்லாத இடத்தில நான்ஏன் இருக்கணும். நான் டைரக்சன் பண்ணல. எந்த விதமான அக்ரிமெண்டும் போடல.ஆனாலும் அக்ஷய்குமார் நல்லவர்.அவருக்காக அந்த கதையை எடுக்க அனுமதிக்கிறேன்.நான் டைரக்சன் பண்ணல” என வந்து விட்டாராம் லாரன்ஸ் மாஸ்டர்.

478 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன