
நடிகை அமலாபால் இப்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது எல்லாரும் ஷாக் ஆனார்கள். அந்தளவுக்கு அமலாபால் அறைகுறை உடையில்… உடை என்றே சொல்ல முடியாது சும்மா கிழிந்த துணிகளை உடலில் சுற்றிக்கொண்டு கவர்ச்சியாக அந்த படம் இருந்தால் பெரும் சர்ச்சை எழுந்தது.

அதிலும் ஆடை என படத்துக்கு பேர் வைத்துக்கொண்டு கதாநாயகியகிக்கு ஆடையற்ற காட்சி எடுக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும் “என்றார்.
தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர்.

ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்க படக்குழு ஷாக் ஆகியிருக்கிறது.
வன்முறை ஆபாச காட்சிகளை குறைத்தால் யு/ஏ பெற வாய்ப்பு உள்ளது.

