
தாதா87 படத்திற்கு பிறகு… பிறகு படத்தின் நாயகன் அம்சவர்தனை கதையின் நாயகனாக்கி பீட்ரு என்ற படத்தை இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ.
தாதா87 படத்தில் எப்படி சாருஹாசனை சத்தமில்லாமல் பெரிய தாதாவாக வலம் வரச் செய்து படத்தை ஹிட் ஆக்கினாரோ அதே போல பீட்ரு படத்தில் அம்சவர்தனை கலகலப்பாக அதே நேரம் டெரர் உடம்புடன் வலம் வரச் செய்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.
இதிலும் அம்சவர்தன் தாதா கெட்டப்பில் இருந்தாலும் கலகலப்புக்கு குறையிருக்காது.
காமெடி நடிகர் பட்டாளம் பலரை பீட்ருவில் அம்சவர்தன் கூடவே வலம் வரச் செய்வதால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பே தட்டாதாம்.
அதே நேரம்… “எத்தனை பேர் எதிர நிக்குறான்றது முக்கியமில்ல நாம யார் எதிர நிக்குறோம்றது தான் முக்கியம்… எதிர பீட்ருடா… ” என்று தெறிக்கும் பஞ்ச் வசனங்களும் படத்தில் ஆங்காங்கே வந்து தாக்குமாம்.
அடிப்படையில் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஒரு வக்கீல் என்பதால் சமூகத்தில் நடக்கும் அவலத்தையும் சொல்லாமல் இருக்க மாட்டார்.
தனது முதல் படமான தாதா87 படத்தில் திருநங்கைகள் பற்றி அத்தனை அழகாக சொல்லியிருந்தார்.
அதே போல பீட்ருவிலும் அதிரடி இருக்கிறதாம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குமாம்.
