
விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில்,
“விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி” என்றார்
எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது,
“சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இந்தப்படம் பேப்பரில் என்ன இருந்ததோ அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்
நடிகை லெனா பேசியதாவது,
“கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிறார். சியான் விக்ரம் அவர்களோட பணியாற்றியது லவ்லி அனுபவம்” என்றார்
நடிகர் அபி பேசியதாவது,
“என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முதலில் கமல் சாருக்கு நன்றி. விக்ரம் சாரை பெரிய ஹீரோ என்பதால் சூட்டிங் போகும்போது ஒருமாதிரி நினைத்துப் போனேன். ஆனால் அவர் மிக உயர்ந்தவர். இயக்குநர் ராஜேஷ் சார் எத்தனை டேக் போனாலும் எனக்குச் சப்போர்ட் பண்ணினார்” என்றார்
நடிகை அக்ஷ்ரா ஹாசன் பேசியதாவது,
“அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி” என்றார்
இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது,
“இது என்னோட 25-வது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்பெஜ்ஷன் ஆக்டர் அவர்.அவர் படத்திற்கு ரீ ரிங்காடிங் பண்றது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி” என்றார்
இயக்குநர் ராஜேஷ் M.செல்வா பேசியதாவது,
“ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். தூங்காவனம் படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல்சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப்படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப்படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கி உதவி செய்திருப்பார். அக்ஷரா ஹாசன் அபி நடிக்க இருந்ததால் ஒரு பக்கா வொர்க்ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்தரன் சார் ராஜ்கமல் பிலிமஸோட படம் பண்றோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவார். சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். ஏன் இந்தப்படத்தில் அக்ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்” என்றார்்

தயாரிப்பாளர் ரவீந்தரன் பேசியதாவது,
