ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் – அமலாபாலின் ஓப்பன் டாக்
ஆடை பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை அமலாபால் கூறியதாவது :
பெண்களை மையப்படுத்தி என்னிடம் வந்த கதைகள் பொய்யாகவே இருந்தன. அதனால் திரைத்துறையில் இருந்து விலக முற்பட்டேன். அந்த நேரத்தில் தான் ஆடை படத்தின் கருவை படித்தேன். அதன்பின்னர் ஒரு ஹோட்டலில் ரத்னகுமார் என்னிடம் கதை சொன்னார். இக்கதையும் எனக்குப் பிடித்திருந்தது. என் 9 வருட வாழ்க்கையில் இப்படம் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
ஆடை படத்தில் நிர்வாண காட்சிகள் எடுக்கும் போது இடத்தில் என்னை சுற்றி 15 பேர் இருந்தனர். அதில் லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.பாஞ்சாலிகு 5 கணவர்கள் என்று சொல்வார்கள்.அது போல் எனக்கு 15 பேர் கணவர்களாக இருப்பதாக உணர்ந்தேன்.அவர்கள் கொடுத்த பாதுகாப்பான உணர்வு என்னை பயமின்றி நடிக்க வைத்தது. என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.