சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

விஜய்யின் “பிகில்’ கதைக்கு திடீரென உரிமை கொண்டாடும் தெலுங்கு இயக்குனர்… ஏற்கனவே 2 இதுவும் சேர்ந்தா 3 புகார்

 

விஜய்யின் “பிகில்’ கதைக்கு திடீரென உரிமை கொண்டாடும் தெலுங்கு இயக்குனர்… ஏற்கனவே 2 இதுவும் சேர்ந்தா 3 புகார்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு மீரான் என்ற இயக்குனர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பிகில் கதை தன்னுடையது என புகார் அளித்தார்.

இயக்குனர் அட்லி மீது கதை திருட்டு புகார் சொன்ன இரண்டாவது இயக்குனர் இவர்.

இந்நிலையில், தெலுங்கு பட இயக்குனர் சின்னிகுமார் என்பவர் ‘பிகில்’ இயக்குனர் அட்லி மீது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கால்பந்து வீரர் அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை ’ஸ்லம் சாக்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கானா சினிமா கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும்,

இந்த படத்தை உருவாக்கும் பணியில் தான் இருந்தபோது, இந்த படத்தின் கதையும் “விசில்’ கதையும் ஒன்று என தனக்கு தெரிய வந்ததாகவும், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.

கோலிவுட்டில் மட்டுமே சுற்றி வந்த கதை திருட்டு புகார் இப்போது தெலுங்கு பட உலகிற்கும் சென்றுள்ளது.

ஒரே கதைக்கு 4 பேர் உரிமை கொண்டாட … திட்டமிட்ட படி பிகில் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கிறது AGS நிறுவனம்.

974 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன