தமிழ்நாடு தாண்டி ஆந்திரா- தெலங்கானாவிலும் விஜய்யின் பிகில் படத்திற்கான பிரமாண்டமான ஓப்பனிங்..!
விஜய்யின் பிகில்’ படம் வரும் 25ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
தமிழில் மிக பிரமாண்டமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தடைகளை தாண்டி ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ளது.
பிக்ல் படம் ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும் பட்சத்தில், இப்போது ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் படம் மூலம் கிடைத்துள்ளது
அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து விஜய்யின் பிகில் படம் 675 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். நிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களில் ரிலீஸாகவுள்ளது
முதல் முறையாக தென்னிந்தியாவில் தமிழ் நடிகருக்கு இத்தனை ஸ்கிரீன் கிடைத்திருப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் விஜய்யின் எழுச்சியையும் காட்டுகிறது.