திங்கட்கிழமை, மே 13
Shadow

கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்!

 

 

கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்

திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கா‌‌ஷ்மீரில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்களை ஜம்மு-கா‌‌ஷ்மீர் அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான குழுவினர் அங்கு சென்று கோவில் கட்ட ஏதுவான 4 இடங்களை தேர்வு செய்தனர். இறுதிக்கட்டமாக நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்கிறோம். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். கா‌‌ஷ்மீரில் விரைவில் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்.

300 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன