வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

உ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

 

உலகளவில் ஒவ்வொரு நாடும் அதனிடம் உள்ள தங்கத்தின் மதிப்பை கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன. ஆனால் இந்தியாவிடம் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பே 626 டன் மட்டுமே. இந்நிலையில் இந்தியாவில் தங்க சுரங்கங்கள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

1991ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் சிறப்பு கவனம் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பில் தீவிரம் வைத்தது.

இந்த சூழலில் இப்போது உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா பகுதியில் இரண்டு பெரும் தங்க படிமங்கள் கொண்ட பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சோன்பாஹ்தி என்ற பகுதியில் 2700 டன் தங்க படிமங்களும், ஹார்டி பகுதியில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவிடம் இருக்கும் தங்கத்தை விட இது 5 மடங்கு அதிகமாகும்.

இதன் மூலம் உலக நாடுகளில் அதிக அளவு தங்கம் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழல் ஏற்படும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

278 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன