அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு நாளை வர உள்ளதால், இந்தியா மிகவும் பெருமைக்குரிய நாடாக இருக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அமெரிக்க பொருளாதாரம் உயருமே தவிர இந்தியாவுக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக எம்.பி. ஆக இருந்தாலும் சந்தர்ப்பம் அமைந்தால் பாஜகவையும், அதன் தலைவர்களையும் அவ்வப்போது கடும் விமர்சனம் செய்து வருவது சுப்ரமணியசாமி வழக்கம். சமீபத்தில்கூட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இந்த நூற்றாண்டின் முட்டாள்தனமான விஷயம் என்று அவர் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை குறித்து சுப்பிரமணியன் சாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கூறும் போது ” அமெரிக்காவின் பொருளாதாரம் தான் அவருடைய வருகையால் உயரும், நமது நாட்டின் பொருளாதாரம் உயர்த்துவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறிய கருத்து பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.