
புதிய மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 1-3-2020 முதல் புதிய தாழ்வழுத்த மின் இணைப்பு பெற ( குடிசை மற்றும் விவசாயம் நீங்கலாக ) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ,மாநிலம் முழுவதும் உள்ள பொது மக்கள் தாழ்வழுத்த புதிய மின்னிணைப்பு பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்
இணையதளத்தின் மூலம் ( www.tangedco.gov.in ) இணையவழி விண்ணப்பத்தில் கோரும் விவரங்களை பூர்த்தி செய்து துணை ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்யப்பபட்ட பதிவேற்றம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
564 Views
