
கொரானா பீதி வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது!
சீனாவின் ஹூகான் நகரில் இருந்து உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
எனவே கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் மூடப்பட்டது. உஸ்மனாபாத்தில் உள்ள துலிஜா பவானி கோவிலும் மூடப்பட்டது.

இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் நேற்று மாலை 3 மணி அளவில் மூடப்பட்டது. இங்கு தினமும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கொரானா வைரஸ் பீதி உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் வைரஸ் தாக்கம் அதிகமிருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கோவில் மூடப்பட்டது.
