வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்!

 

 

கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்!

இங்கிலாந்து , இளவரசர் சார்லசுக்கு கொரானா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு லேசான கொரானா அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், இளவரசர் சார்லசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொரானா வைரசில் இருந்து குணமடைந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளார்.

305 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன