புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு!

 

திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் கொரானா வைரஸ் நாளுக்கு நாள் மிக   வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு பல இடங்களில் தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சக்கை போடு போடுகிறது.

சுமார் 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் குடி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மது வாங்க சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.  போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததுதான் வேதனை.

இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுதும் பெண்கள் மத்தியில் டாஸ்மாக் கடை திறப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சில இடங்களில் மதுக்கடைகளில் உள்ள மது பாட்டில்களை பெண்கள் அடித்து உடைத்தனர்

இதற்கிடையை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

535 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன