சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

புலம் பெயரும் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க – பிரியங்கா

 

புலம் பெயரும் தொழிலாளர்களின் ரத்தம் மற்றும் வியர்வையில் தான் நாடு இயங்கிக் கொண்டிரு​ப்பதாகவும் அவர்களின் நலனை பேணுவதற்கு அனைவரு​க்கும் பொறுப்பு உள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று பா.ஜ.க.வை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம் செல்லும் புலம் பெயர் தொழிலாளர் நலனுக்காக பிரியங்கா காந்தி ஆயிரம் பேருந்துகளை அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த பேருந்துகளை அனுமதிக்காமல் உ.பி.அரசு முரண்டு பிடித்தது.

இது குறித்து பிரியங்கா காந்தி கூறியது:

காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பா.ஜ.க தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும் செய்து கொள்ளுங்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் காலதாமதம் செய்யாமல் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.

419 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன