வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை – எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு

 

தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை – எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவரை விமர்சித்ததன் புகாரின் பேரிலே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிகூட உண்மை இல்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். ஆர்.எஸ். பாரதி பேசிய போதே மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரானா வைரஸ் பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. தமிழகம் கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றார் எடப்பாடிபழனிச்சாமி.

291 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன