புதன்கிழமை, ஜூலை 29
Shadow

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற மாவட்டங்களில் நாளை முதல் பஸ்கள் ஓடும்!

 

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற மாவட்டங்களில் நாளை முதல் 50 சதவீத பஸ்கள் ஓடும்!

தமிழகத்தில் நாளை முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத அரசு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்துகள் இயக்கத்திற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த விதிமுறைகள் விவரம்:

1. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அல்லது வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை துணியால் மூடியிருக்க வேண்டும்

2. ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் முடியும்போது கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்

3. ஓட்டுநர், நடத்துனர் கையுறை மற்றும் முகக் கவசம் அணிவது கட்டாயம். அவர்களுக்கு ஒரு பாட்டில் கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.

4. பேருந்து முனையங்களில் ஒவ்வொரு நாளும் இருமுறை கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும்

5. குளிர்சாதன பேருந்துகளில் ஏ.சி. பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்

6. பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள்

7. தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரானா பரிசோதனை தேவையில்லை

8. பேருந்து பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும்

474 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன