வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு… பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம்!

 

 

கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு… பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம்.

கொரானா வைரஸ் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

உலக அளவில் பாதிப்பில் 11வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 6வது இடத்துக்கு உயர்ந்துள்ளது உண்மையில் அச்சப்பட வேண்டிய உயர்வு இது.

கொரானா எப்போது முடிவுக்கு வரும் என்பதே தெரியாத போது மத வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்து உள்ளது.

மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரானா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி மத வழிபாட்டு தலங்களின்
நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.

நோய் அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

கொரானா பரவல் எச்சரிக்கை விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.

அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக் கொள்ளலாம்.

சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.

மத வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

தரிசனம் செய்ய வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம் என ஏதாவது ஒரு குறியீடு வரைந்திருக்க வேண்டும்.

முறையான உள் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே விசாலமான அளவில் இருக்க வேண்டும்.

தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கோயில், மத வழிபாட்டு தலங்களில் உள்ள வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் நன்றாக கழுவ வேண்டும்.

இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏசி பயன்படுத்துவோர் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும்.

சிலைகள், சிற்பங்கள் தொட்டு வணங்கவோ, அங்குள்ள புத்தகங்களையோ வேறு எந்த பொருளையும் தொடுவதற்கு அனுமதி இல்லை.

அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.

ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.

சாமி பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்ட எதையும் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கக் கூடாது.

சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்சல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.

கழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே கண்டிப்பாக சானிடைசர்களையும், கிருமி நாசினியும் வைக்க வேண்டும்.

464 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன