ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

கொரானா தொற்றால் திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

 

கொரானா தொற்றுக்கு பலியான திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து கடந்த வாரம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான சில மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அந்த மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல் நிலை குறித்து விசாரித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை இன்று மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவமனை அறிவித்துள்ளது.

உரிய நடை முறைகளுக்கு பிறகு ஜெ அன்பழகன் உடல் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

இதன் மூலம் நாடு தழுவிய அளவில் கொரானாவுக்கு எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக நடத்திய ஒன்றிணைவோம் வா நிவாரண உதவி வழங்கும் பல நிகழ்ச்சிகளில் அன்பழகன் கலந்து கொண்டு மக்களுக்கு உதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கொரானாவில் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு இன்றுதான் 62வது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

401 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன