வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

கொரானா குவாரண்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!

 

 

கொரானா குவாரண்ட்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!

கொரானா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார்.

டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் அஞ்சலி வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரானா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பணிகளைத் தவிர சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. 5-ம் கட்ட பொது முடக்க அறிவிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனைகள் கட்டுப்பாடுகளுடன் டிவி சீரியல் படப்பிடிப்புகள், சினிமா போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

அனுஷ்கா ஷெட்டி, மாதவன் ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஞ்சலி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இது தனக்கு ஒரு பெரிய பிரேக்கை தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தற்போது, கொரானா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை அஞ்சலி, இயகுனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து வீடியோ காலில் நிசப்தம் படத்தின் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார்

வீடியோ காலில் டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் அஞ்சலி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து அஞ்சலி குறிப்பிடுகையில், “டப்பிங் பேசிய தருணம். வீடியோ காலில் குவாரண்டைன் டப்பிங்” என்று பதிவிட்டுள்ளார்.

குவாரண்டைன் நேரத்தில் டப்பிங் பேசியதற்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்தார்.

985 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன