வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

ரூ.3 ஆயிரம் கோடி நிதி வேண்டும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

 

கொரானா தடுப்பு உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி நிதி வேண்டும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கொரானா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது;-

“தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும்,

2020-21-ம் நிதியாண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும்,

சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்.

கொரானா தடுப்பு பணிக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என்று பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர், எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தமிழகம் ஆதரவாக இருக்கும் என கூறியுள்ளார்

294 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன