வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சாத்தான்குளம் இரட்டை கொலை… ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு!

 

 

 

சாத்தான்குளம் இரட்டை கொலையில் 6 பேர் மீது வழக்கு ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு..

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சிபிசிஐடி உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று சிபிசிஐடி பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது சிபிசிஐடி. சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு செய்து சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் போலீசார் மகாராஜன், முருகன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உடனடியாக எஸ்.ஐ.  ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். இன்னொரு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மிக முக்கியமான குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டிய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஏனோ ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் இருந்து விலக்கப்பட்டே இருக்கிறார்.

காரணம், கொல்லப்பட்ட ஜெயராஜை கடையில் இருந்து வாகனத்தில் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்தான் என்பதை பல ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிறகும் இந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை மட்டும் காப்பாற்ற அதிகார அமைப்பு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

329 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன