
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற புதிய காப்பீடு திட்டம்!
இந்தியாவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களில் பலர் சிகிச்சைக்கு உரிய நேரத்தில் பணம் கட்ட முடியாமல் பரிதாபமாக பலியாகிறார்கள். இந்த சிக்கலை போக்க மத்திய அரசு புதிய காப்பீடு திட்டத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆண்டு தோறும் சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இந்த விபத்துக்களில் சிக்கி சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் படி, விபத்தில் சிக்குபவர்கள் அனைவருக்கும் ரூ.2.5 லட்சம் வரை பணம் எதுவும் இன்றி இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியை ஏற்படுத்துமாறு, மாநில போக்குவரத்து செயலர் மற்றும் ஆணையர்களுக்கு சாலை போக்குவரத்து அமைச்சகம், கடிதம் எழுதியுள்ளது.
அதேசமயம், உரிமம் இன்றி வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்தியவர்கள் சிகிச்சையில் இருந்த்நு குணமடைந்தவுடன், இத்தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பல உயிர்கள் காப்பாற்ற படும்.
