
சாத்தான்குளம் அப்பா-மகன் படுகொலைக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 SI உட்பட 2 போலீசார் பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றம்!
சாத்தான்குளத்தை சேர்ந்த மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில்
.
இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள், 2 காவலர்கள் பேரூரணி சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வழக்கமாக பிரபலமான ரவுடிகள், கொலைகாரர்கள், அரசியல் பிரமுகர்களைத்தான் பாதுகாப்பு கருதி சிறை மாற்றம் செய்வார்கள். இங்கே தவறு செய்த போலீசார் மாற்றப்பட்டு உள்ளனர்.

