
ஸ்டாலினிடம் ரூபாய் 1 கோடி கேட்டு துணை சபாநாயகர் வழக்கு: விளக்கம் கேட்கும் கோர்ட்
ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்பு படுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது குற்றம் சாட்டிய பொள்ளாச்சி ஜெயராமன், திமுக தலைவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் மீது திமுகவினர் குற்றம் சுமத்தி இருந்தது நினைவிருக்கலாம்.
511 Views
