செவ்வாய்க்கிழமை, மார்ச் 19
Shadow

மெசேஜ் படத்தை விட ஆபாச படத்தை எடுத்திருந்தா பெருசா ஜெயிச்சிருப்பேன் ஒரு இயக்குனரின் வேதனை!

 

மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம் நுங்கம்பாக்கம் படத்தின் இயக்குனர் வேதனை!

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் ”

தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன்.

இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு,

தயாரிப்பாளர் ரவிதேவன் பேசியதாவது…

“முதலில் இந்தப் படத்தை ஏன் ஆதரிக்கணும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இருக்கும். ஆனால் நாம் இந்தப்படத்திற்கு நல்லாதரவு தரணும். நீங்கள் வீட்டில் இருந்தே பார்க்கும் படியாக வசதி ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தப்படத்தில் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கும். இந்தப்படத்தைப் பெரிதாக வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றார்.

நடிகர் ஆர்.என் ஆர் மனோகர் பேசியதாவது..

“சமுதாயத்தின் முகமூடியை கிழிக்கும் பட விழாவிற்கு நாம் அனைவரும் முகமூடி அணிந்து வந்துள்ளோம். பல தடைகளைக் கடந்து வந்துள்ள இப்படைப்பு ஒரு மாபெரும் படைப்பாக இருக்கும்” என்றார்.

நடிகர் அஜ்மல் பேசியதாவது..

“நுங்கம்பாக்கம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடித்தளமாக கொண்ட படம். பல தடைகளைத் தாண்டி கொண்டு வந்துள்ளோம். இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு வந்ததிற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படம் மூலமாக பல விசயங்கள் வெளிவரும். பல உண்மைகள் தெரியும். இப்படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..

“ஏழுமாதம் கழித்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பிரச்சனைகள் எப்ப முடியும். இந்தப்படம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல இங்கு இவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப்படம் வராவிட்டால் அந்த கொலை வழக்கே நமக்கு மறந்து போய்விடும். எதற்காக இந்த இயக்குநர் மீது ஏழு கேஸ் போட்டார்கள் என்றே தெரியவில்லை. இந்தப்படம் பற்றிய செய்தி வெளிவந்தாலே பலருக்குப் பயம் வந்துவிடும். தான் எடுத்த காரியத்தை கடைசி வரை முடித்த இயக்குநரைப்.பாராட்ட வேண்டும். இந்த நீதிமன்றத்தில் கொஞ்சம் ஈரம் இருந்ததால் தான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. இவ்வளவு போராட்டத்தை சந்தித்த இயக்குனருக்கு இந்த சினிமாக்காறர்கள் யாரும் இவருக்கு ஆதரவாக குரல்கொடுக்க முன் வராதது மிகவும் தவறான விஷயம், எதையெதையோ பார்த்தோமே..₹49 ரூபாய் கொடுத்து இந்தப்படத்தை பார்ப்போம். போராடுபவன் இறைவனின் பிள்ளை. போராட்டம் தோற்பதே இல்லை. இந்தப்படம் பெரு வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்

இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியதாவது…

“இந்த மேடையில் நிற்க வைத்த ஜெயச்சந்திரன் ஜே அவர்களுக்கு நன்றி. கிருஷ்ணகிரி கோவிந்தராஜ் அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக ரமேஷ் குமார் அவர்களுக்கும் நன்றி . நகரி பரத்குமார் அவர்களுக்கும் நன்றி.

இரண்டறை வருட போராட்டம். கஜினி முகமதுவை விட அதிகப்போராட்டத்தைச் சந்தித்தேன். நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விசயங்களை செய்யவே முடியாது. ஒரு மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். இந்தப்படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்பவே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தை வெளியிடக்கூடாது என பெண்ணின் தந்தை கேஸ் போட்டுவிட்டார்.

அந்தப்பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை. இந்தப்படத்தின் கதையை ரைட்டர் சூளைமேட்டில் ஒவ்வொரு தெருத்தெருவாகப் போய் எழுதினார். இந்தப்படத்தில் சைபர் க்ரைம், போலீஸ் டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு பல விசயங்கள் இருக்கு.

இந்தப்படத்தின் இயக்குநரை கைது செய்யணும் என்று போலீஸ், சென்சார் அதிகாரி பக்கிரிசாமியிடம் போய் கேட்டார்கள். நான் பெங்களூரில் போய் ஒளிந்துகொண்டு பின் பெயில் வாங்கியதும் வந்தேன். நான் ஏழு படம் செய்தவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள். என் ஆபிஸ் பாய்ல இருந்து 24 பேரிடம் விசாரித்தார்கள். போலீஸ் என்னை படத்தில் அதைத் தூக்கு இதைத்தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்து தான் லெட்டர் கிடைத்தது.
அதன்பின் சென்சார் போனேன். அங்கு பெயர் டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. பின் ஆறுமாத போராட்டம். அது முடிந்ததும் அந்தணர்கள் கேஸ் போட்டார்கள். அதன்பின் ஒரு வழக்கு வந்தது. அதையும் சமாளித்து படத்தை வெளியிட நினைத்தால் கொரோனா வந்துவிட்டது. தற்போது Cineflix என்ற ஓடிடியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது. இந்தப்படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77-ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம். தயவுசெய்து ₹49 ரூபாய் கட்டிப் பார்க்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் நான் சூசைட் தான் பண்ணணும். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்” என்றார்.

199 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன