சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

 

*சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு*

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சிறு நீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண் டியனுக்கு, சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமத்தனமான செய்தி இது என கடிதத் தில் சசிகலா தெரிவித்துள்ளார். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தம்மை சந்திக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள சசிகலா, இதுபோல உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வதந்தி பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

374 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன