வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்

 

நடிகர் சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்-கும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கருணாகரன், யோகி பாபு, பானு பிரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படதொகுப்பு செய்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

அயலான் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அயலான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது” என்று குறிப்பிட்டு படப்பிடிப்பு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். அதில், கையில் காயங்களுடன் சிவகார்த்திகேயன் ரகுல் பிரித் சிங்குடன் காரில் அமர்ந்திருக்கிறார். கருணாகரன் காரை ஓட்டுகிறார். கருணாகரனுக்கு அருகில் சோகமாக யோகி பாபு அமர்ந்துள்ளார். இந்த ட்விட்டை ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படமும் இறுதிக்கட்ட படபிடிப்பை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

510 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன