ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என சூர்யா – ஹரி கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. சாமி ஸ்கொயர் படத்துக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்க உள்ளதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
‘அருவா’ என்ற டைட்டிலில் உருவாகும் அந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் இப்படம் தொடங்கப்படவில்லை. இயக்குனர் ஹரிக்கும் நடிகர் சூர்யாவிற்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அருவா திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஹரி – அருண் விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் இந்தப் படம் அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
176 Views