
பெரு நாட்டில் சாண்டா கிளாஸ் வேடமிட்டு சென்ற போலீசார் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியை மடக்கி கைது செய்தனர்.
பெரு நாட்டில் லிமா என்ற இடத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சாண்டா கிளாஸ் வேடமிட்டு சென்று, அவனை கைது செய்ய போலீசார் முடிவு எடுத்தனர். அப்போது கடத்தல் கும்பலின் தலைவன் லுயஸ் அன்டோனியோ என்ற அந்த குற்றவாளி பதுங்கி இருந்த கட்டடத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று அவனை போலீசார் கைது செய்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து கண்ணாடி கோக்கைகள் போன்ற போதைப் பொருட்களும், கைத்துப்பாக்கியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

282 Views
