ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க தயார் ஆகிறார் கமல்ஹாசன்..!

 

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதில் தனது நற்பணி மன்ற இயக்கத்தினர் இதுவரை செய்த பல சேவைகள், இனிமேல் செய்யப் போகும் பணிகள் குறித்து அவர் பேசவிருக்கிறார். அதற்கான விபரங்களை தனது நற்பணி மன்ற இயக்கத்தினரிடம் அவர் கேட்டுள்ளதாக தெரிகிறது. அரசியலை பொறுத்தவரை பல திருப்புமுனைகளை உண்டாக்கியது மதுரைதான்.

மேலும், கமலுக்கு அங்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனவேதான் அங்கு பொது பொதுக்கூட்டத்தை நடத்த கமல் திட்டமிட்டிருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை கமல் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ரசிகர்கள், நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பின்  அறிவிப்பார் எனத் தெரிகிறது.

மதுரை மாவட்ட மக்கள் புதிய அரசியல் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பவர்கள். எனவே தனது முதல் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க கமல்ஹாசன் தயாராகி வருகிறார்.

246 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன