செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் வழங்கினார்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக  உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் வழங்கினார்!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் வழங்கினார்.
இந்நிலையில், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார். இதேபோல் ‘தமிழ் படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதனும், ரூ.50 ஆயிரத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கி உள்ளார்.
173 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன