வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

இங்கிலாந்தின் சவுத்தம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் பேட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது.

இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முதலில் பேட்டிங் செய்யும் போது எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

2002-ம் ஆண்டு லீட்ஸ் அல்லது 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் நாம் முதலில் பேட்டிங் செய்தோம். ஆரம்ப அழுத்தத்தை சமாளித்து ரன்களை எடுத்தோம். அப்படிதான் அந்த போட்டிகளில் வென்றோம்.

காலை வேளையில் மேக மூட்டமாக இருந்தாலும் இந்திய அணி டாஸ் ஜெயித்தால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அணிக்கு சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 20 ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும்.

இது புஜாரா, கோலி மற்றும் ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல அத்தளத்தை அமைக்க உதவும்.

கடந்த 30-35 ஆண்டுகளில் இதுதான் சிறந்த நியூசிலாந்து அணி. அவர்கள் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளதால் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

175 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன